டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தெஹ்ரான் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் பூங்காவில் இன்று குண்டு வெடித்ததில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
மேலும் நாட்டின் அதிகார்பூர்வமான செய்தியில், இந்த குண்டு வெடிப்பின் மூலம் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.
காவல்துறை தரப்பிலிருந்து இதைப்பற்றி விசாரிப்பதாகவும் வெளிநாட்டு செய்திகள் இச்சம்பவத்தை மிகைப்படுத்துகிறார்கள் எனக் கூறியிருக்கிறார்கள்.