மலேசியாவிலுள்ள கரோனா தடுப்பூசி மையமொன்றில் பணியாற்றும் 204 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மையம் மூடப்பட்டது. செலாங்கர் மாகாணத்தில் இயங்கி வந்த அந்த தடுப்பூசி மையத்தில் பணியாற்றும் அவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.