ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் என்ற நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய பலரை ராணுவ உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை 30 பேர் காணவில்லை என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.