தென் ஆப்பிரிக்கா : வன்முறை போராட்டங்களில் 117 பேர் பலி

போராட்டங்களில் ஈடுபட்டவர்களில்   117 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் படுகாயங்கள் அடைந்ததாகவும்   அந்நாட்டு அமைச்சர்  அறிவித்திருக்கிறார். 
தென் ஆப்பிரிக்கா : வன்முறை போராட்டங்களில்  117 பேர் பலி
தென் ஆப்பிரிக்கா : வன்முறை போராட்டங்களில் 117 பேர் பலி

ஜோக்கனஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உருவான வன்முறை போராட்டம்  கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதால் அரசிற்கு பெரும் பிரச்சனையாகி இருக்கிறது . இதனால் வெடித்த   வன்முறைகளில் பலர் தாக்கப்பட்டார்கள்.  போராட்டங்களில் ஈடுபட்டவர்களில்   117 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் படுகாயங்கள் அடைந்ததாகவும்   அந்நாட்டு அமைச்சர்  அறிவித்திருக்கிறார். 

மேலும் 2200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை என்றும்   போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் பாதுகாப்பு படையினர் தாக்கப்படுவதும் தொடர்ந்து வருவதால் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக  அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com