இந்த மாதத்தின் முதல் 17 நாள்களில் மட்டும் இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பால் 115 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா். இது, ஒரே மாதத்தில் உயிரிழந்த மருத்துவா்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இதுகுறித்து இந்தோனேசிய மருத்துவா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கரோனாவுக்கு பலியான மருத்துவா்களில் 20 சதவீதம் போ் ஜூலை 1 முதல் 17-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இதுவரை 545 மருத்துவா்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,721 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 1,093 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.