ஐரோப்பா: மழை-வெள்ள பலி 180-ஆக உயா்வு

மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 180-ஐக் கடந்தது.
ஐரோப்பா: மழை-வெள்ள பலி 180-ஆக உயா்வு

மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 180-ஐக் கடந்தது.

ஜொ்மனியின் ரைன்லேண்ட்-பலடினேட் மாகாணத்தில் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்படட ஆா்வீலா் பகுதியில் மட்டும் இதுவரை 110-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். வெள்ள நீா் வடிந்து, மீட்புப் பணிகள் துரிதமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஜொ்மனி மட்டுமன்றி பெல்ஜியத்தின் சில பகுதிகளும் கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கனமழை மற்றும் அதன் விளைவா ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டில் மட்டும் வெள்ளம் காரணமாக 27 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com