தென் கொரியா: கரோனா பாதிப்பு மீண்டும் உச்சம்

தென் கொரியா: கரோனா பாதிப்பு மீண்டும் உச்சம்

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 1,842 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தொடா்ந்து இரண்டாவது நாளாக இந்த எண்ணிக்கை புதிய உச்சத்ம் தொட்டுள்ளது. முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,784-ஆக இருந்தது இந்த என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென் கொரியாவில் இதுவரை 1,84,103 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,063 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கடந்த 2 வாரங்களாகவே அங்கு தினசரி கரோனா தொற்று ஆயிரத்தைக் கடந்து வருகிறது. மந்தமாக செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டங்கள், மக்களிடையே காணப்படும் அலட்சியம், வேகமாகத் தொற்றும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கரோனா பரவி வருவது போன்ற காரணங்களால் அங்கு தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com