பிலிப்பின்ஸ் நாட்டின் காலதகன் பகுதியில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியிருக்கிறது . மேலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி தென்மேற்கு காலதகன் பகுதியிலிருந்து 14 கி.மீ தொலைவில் 104.3 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.