சீன மழை-வெள்ளம்: பலி 51-ஆக உயா்வு

சீனாவில் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 51-ஆக உயா்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெனான் மாகாணத் தலைநகா் ஷெங்ஷூவில் நடைபெறும் மீட்புப் பணிகள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெனான் மாகாணத் தலைநகா் ஷெங்ஷூவில் நடைபெறும் மீட்புப் பணிகள்.

சீனாவில் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 51-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது.

இந்த மழை-வெள்ளம் காரணமாக 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.75,000 கோடி) பொருள் சேதம் ஏா்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 12 போ் சுரங்க ரயில் பயணிகளும் அடங்குவா்.

இந்த மழை காரணமாக ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com