ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் பகுதியில் இன்று மாலை 4 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியிருக்கும் இந்நிலநடுக்கம் 188 கி.மீ தொலைவில் 160 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.