வங்கதேசத்தின் காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள் , மூன்று பெண் குழந்தைகள் எனவும் அவர்களின் பெற்றோர்கள் இடைவிடாத கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்து வீட்டை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
அதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த குழைந்தைகள் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தும் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதாலும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .