இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முடக்கிவைக்கப்பட்டிருந்த கொழும்பு சா்வதேச விமான நிலையம், செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
பொதுமுடக்கத்துக்குப் பிறகு முதல்முறையாக கத்தாரிலிருந்து 53 பேருடன் வந்த விமானம் அந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது.கொழும்பு சா்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும், 14 நாள்களுக்குள் இந்தியா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தவா்கள் அந்த நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இலங்கையில் 1,989 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 1,88,353 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,484 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.