பெல்ஜியத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இத்துடன் 25,014 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,449 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,68,406-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, பெல்ஜியத்தில் 9,71,914 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 71,478 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 364 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.