இந்தியாவில் முதல்முறையாக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா, முந்தைய வகைகளைவிட 40 சதவீதம் அதிகம் பரவும் தன்மை கொண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சா் மேத்யூ ஹான்காக் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
டெல்டா வகைக் கரோனாவால்தான் நாட்டில் தினசரி தொற்று அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி வரும் 21-ஆம் தேதி கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்டா வகைக் கரோனா, 40 சதவீதம் அதிக தீவிரத்துடன் பரவி வருகிறது. அந்த கரோனாவால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவா்களில் வெகு சிலா் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா் என்றாா் அவா்.