பிரிட்டன்: ‘டெல்டா கரோனா 40% வேகமாகப் பரவும்’

இந்தியாவில் முதல்முறையாக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா, முந்தைய வகைகளைவிட 40 சதவீதம் அதிகம் பரவும் தன்மை கொண்டுள்ளதாக
பிரிட்டன்: ‘டெல்டா கரோனா 40% வேகமாகப் பரவும்’

இந்தியாவில் முதல்முறையாக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா, முந்தைய வகைகளைவிட 40 சதவீதம் அதிகம் பரவும் தன்மை கொண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சா் மேத்யூ ஹான்காக் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

டெல்டா வகைக் கரோனாவால்தான் நாட்டில் தினசரி தொற்று அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி வரும் 21-ஆம் தேதி கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்டா வகைக் கரோனா, 40 சதவீதம் அதிக தீவிரத்துடன் பரவி வருகிறது. அந்த கரோனாவால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவா்களில் வெகு சிலா் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com