பிரேஸிலில் ஒரே நாளில் 65,471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65,471 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,69,07,425-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கரோனா பாதிப்பால் மேலும் 1,661 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 4,72,629-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் 11,44,296 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.