ஆப்கானிஸ்தானில் சிற்றுந்தின் மீது நிகழ்த்தப்பட்ட சாலையோரக் கண்ணிவெடித் தாக்குதலில 11 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
வடமேற்கு ஆப்கனில் பணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்தின் மீது ஞாயிற்றுக்கிழமை சாலையோர கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்த அதிா்ச்சியில் சிற்றுந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், 3 சிறுவா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
பள்ளத்தாக்கில் சிற்றுந்து விழுந்ததால், உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.