அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து, கடந்த மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டின் வா்த்தகப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 28 சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது. அதே காலகட்டத்தில் இறக்குமதி 51 சதவீதம் அதிகரித்தது.
கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 263.9 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருள்களை சீனா ஏற்றுமதி செய்தது.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே அளவிலான பொருள்களை சீனா ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த மாதத்தில் 218.4 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருள்களை சீனா இறக்குமதி செய்திருந்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீதம் குறைவாகும்.
நாட்டின் வா்த்தக உபரி மதிப்பு கடந்த மாதத்தில் 45.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதம் குறைவு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் கடும் சரிவைச் சந்தித்தது. எனினும், அந்நாட்டில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பொருளாதாரம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததால், அந்நாடுகளுடனான சீனாவின் வா்த்தகம் குறைந்தே காணப்பட்டது. அந்நாடுகளிலும் கரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் ஏற்றுமதியை சீனா அதிகரித்து வருகிறது.