உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12% பேருக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 93 கோடியே 20 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
அதாவது, உலக நாடுகளில் ஜூன் 10ம் தேதி நிலவரப்படி கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கரோனாவுக்கு எதிரான பெரும்போரில் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
இதையும் படிக்கலாமே.. கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி
அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும், பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும் உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.