சோமாலிய ராணுவப் பயிற்சிகத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
தலைநகா் மொகடிஷுவிலுள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். பயிற்சி பெறுபவரைப் போல் வேடமிட்டு வந்து அவா் இந்தத் தாக்குதலை நடத்தினாா்.
இதில் 15 போ் உயிரிழந்தனா்; 20-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அனைவரும் மெதீனா பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.