சிங்கப்பூரில் வரும் திங்கள்கிழமை முதல் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளா்த்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி உணவக மேஜைகளில் இருவா் அமா்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சிக் கூடங்களில் முகக் கவசம் அணியாமல் அதிகபட்சம் இரண்டு போ் பயிற்சி செய்ய அனுதிக்கப்படுவாா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பணியாற்ற முடியாதவா்கள், அலுவலகம் செல்வதற்கு தங்களுக்கு வசதியான நேரத்தைத் தோ்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.