ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் தொடா்ந்து 2-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு அதிபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாஸ்கோவில் 9,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முந்தைய நாளில் 9,056 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அங்கு மீண்டும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் கரோனா பாதிப்பு 53,16,826-ஆகவும் பலி 1,29,361-ஆகவும் உள்ளது.