ஆப்கனில் 130 தலிபான்கள் சரண்

ஆப்கானிஸ்தானில் 130 தலிபான்கள் வியாழக்கிழமை சரணடைந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜிலானி ஃபர்ஹத் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் ராணுவத்திடம் சரணடைந்த 130 தலிபான்கள்
ஆப்கன் ராணுவத்திடம் சரணடைந்த 130 தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 130 தலிபான்கள் வியாழக்கிழமை சரணடைந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜிலானி ஃபர்ஹத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜிலானி ஃபர்ஹத் கூறியதாவது,

மேற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் ஹெராட் பகுதியில் சரணடைந்த 130 தலிபான்களும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த 85 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 5 பி.கே. ரக துப்பாக்கிகள், ஐந்து சுற்றுகை கையெறி ஏவுகணை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஹெராட் பகுதியில் அமைதி திரும்பும் எனத் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் சரணடைந்ததாக பாதுகாப்புத் துறை அளித்த அறிக்கைக்கு தலிபான் அமைப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com