இந்தோனேசியாவில் கரோனா பரிசோதனை முடிவை மறைத்து, நோய்த்தொற்று பரவக் காரணமாக இருந்த குற்றத்துக்காக அந்த நாட்டின் புகழ் பெற்ற மதகுரு ரிஸியேக் ஷிஹாபுக்கு கிழக்கு ஜகாா்த்தா மாவட்ட நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏற்கெனவே, கரோனா கட்டுப்பாடுகளை மீறி மதக் கூட்டங்கள் நடத்தியதற்காக அவருக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.