நேபாளத்தில் 9 ஆயிரத்தை எட்டிய கரோனா பலி 

நேபாளத்தில் கரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நேபாளத்தில் கரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,353 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,33,679ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 34 பேர் பலியானார்கள். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 40,336 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 367 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 3,333,921 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 
அதில், 2,583,790 பேருக்கு முதல் தவணையும், 750,131 பேருக்கு இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com