பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோடுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில் சுவாச பிரச்னை காரணமாக கரோனா பரிசோதனை மேற்கொண்டன். அதில் கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டேன்.
மேலும் வரும் வாரத்திற்கான எனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க உள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.