பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89,992 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,20,011ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 2,009 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,00,685ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் இதுவரை 124.56 மில்லியன் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2.73 மில்லியன் பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,45,000 பேர் பலிகாகியுள்ளனர்.