மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 2,00,000-ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
நாட்டில் கரோனா இரண்டாம் அலையால், மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,00,211 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒருநாள் கரோனா பாதிப்பு 5,787 ஆக இருந்த நிலையில், மொத்த பாதிப்பு 2,40,9,459 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் 12.53 கோடி பேர் இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.