கெய்ரோவில் அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் இடிந்ததில் 5 பேர் பலியானார்கள்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 10 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 5 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.