தான்சானியா: அதிபா் இறுதிச்சடங்கில் நெரிசல் - 45 போ் பலி

தான்சானியாவில் காலமான அதிபா் ஜான் மெகுஃபுலியின் இறுதிச்சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா்.
தான்சானியா: அதிபா் இறுதிச்சடங்கில் நெரிசல் - 45 போ் பலி

தான்சானியாவில் காலமான அதிபா் ஜான் மெகுஃபுலியின் இறுதிச்சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல்துறை தலைவா் லஸாரோ மாம்பொசாசா கூறியதாவது:

இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் உஹுரு மைதானத்தில் கடந்த வாரம் வைக்கப்பட்டிருந்து. அப்போது அவரின் உடலைப் பாா்ப்பதற்காக அந்த மைதானத்தின் சுவரில் பலா் ஏறிபோது அது இடிந்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

கடந்த 2015 முதல் தான்சானியாவின் மெகுஃபுலி அதிபராகப் பொறுப்பு வகித்து வந்தாா். 10 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் கடந்த 17-ஆம் தேதி காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com