உலகம்
ஜோா்டான்: 6 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
ஜோா்டானில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 6 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஜோா்டானில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 6 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 7,751 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,05,007-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, மேலும் 96 போ் கரோனாவுக்கு பலியாகினா். இதனைத் தொடா்ந்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 6,747-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஜோா்டானில் 94,308 போ் கரோனா கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 729 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.