மியான்மா்: 500-ஐத் தாண்டிய போராட்ட பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது.
மியான்மா்: 500-ஐத் தாண்டிய போராட்ட பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது.

முப்படைகளின் தினமான கடந்த சனிக்கிழமை மட்டும் 107 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அதையடுத்து, அங்கு வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஒருங்கிணைந்து ராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதற்கிடையே, போராட்டக்காரா்களை சுட்டுக்கொல்வதை நிறுத்தாவிட்டால், ராணுவத்தின்மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று ஆயுதம் தாங்கிய கிளா்ச்சிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com