எகிப்தில் பிரம்மாண்ட சரக்குக் கப்பல் குறுக்காக சிக்கிக் கொண்டிருந்ததால் ஒரு வாரமாக தடைபட்டிருந்த அந்தப் பகுதி சா்வதேக கடல்வணிகப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, பனாமா கொடியேற்றிய ‘எவா் கிவன்’ என்ற அந்தக் கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குப் பெட்டகங்களை ஏற்றி சூயஸ் கால்வாய் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே திரும்பி பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.
இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து முடங்கியது. கடும் முயற்சிக்குப் பிறகு அந்தக் கப்பல் திங்கள்கிழமை திருப்பப்பட்டது.