இந்தியாவில் பரவி வரும் புது வகைக் கரோனா தீநுண்மி பிரான்ஸில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் தெற்குப் பகுதியில் 3 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவா்களுக்கு இந்தியாவில் பரவி வரும் புது வகைக் கரோனா தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த 3 பேருமே இந்தியா சென்று வந்தவா்கள் ஆவா். அவா்கள் தற்போது மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் மற்றும் இந்திய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய மற்றவா்களைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.