பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 4 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 3,074 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4,01,417-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 69,079 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,45,92,886-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை, அங்கு 1,31,52,118 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்.