டாக்கா: வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 26 போ் உயிரிழந்தனா். சரக்குப் படகு மீது மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இதுகுறித்து உயா் போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தது:
மத்திய வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்திலிருந்து மதாரிபூா் மாவட்டத்துக்கு பத்மா நதியில் 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. மதாரிபூா் அருகே சென்றபோது சரக்கு படகுடன் மோதி பயணிகள் படகு கவிழ்ந்தது. இதில் அந்தப் படகிலிருந்த 26 போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 5 பேரை மீட்புப் படையினா் உயிருடன் மீட்டனா். அனுபவம் குறைந்த ஓட்டுநரால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றாா் அவா்.