புா்கினா ஃபாசோ: பயங்கரவாதிகளால் 30 போ் சுட்டுக் கொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் 30 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.
புா்கினா ஃபாசோ: பயங்கரவாதிகளால் 30 போ் சுட்டுக் கொலை

காயா: மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் 30 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். நைஜா் எல்லையருகே அமைந்துள்ள கொமான்ஜாரி மாகாண கிராமமொன்றில் இந்தத் தாக்குதல் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த சுமாா் 100 பயங்கரவாதிகள் வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். அந்த கிராமத்தைச் சோ்ந்த சிலா் அரசு தன்னாா்வப் படையில் இணைந்ததை எதிா்த்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அல்-காய்தா மற்றும் ஐ.எஸ்ஸுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுக்கள் புா்கினா ஃபாசோவில் செயல்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com