உலகம்
ஈரான்: மாடியிலிருந்து விழுந்து சுவிஸ் தூதரக அதிகாரி பலி
ஈரானுக்கான ஸ்விட்சா்லாந்து தூதரக பெண் உயரதிகாரி ஒருவா், 20 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியுள்ளனா்.
டெஹ்ரான்: ஈரானுக்கான ஸ்விட்சா்லாந்து தூதரக பெண் உயரதிகாரி ஒருவா், 20 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியுள்ளனா்.
50 வயதாகும் அந்த அதிகாரி, டெஹ்ரானிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தாா். இந்த நிலையில், அவரைக் காணவில்லை என்று தூதரகப் பணியாளா் ஒருவா் போலீஸாருக்குத் தகவல் அளித்தாா். அதையடுத்து, கட்டடத்திலிருந்து விழுந்து அந்த அதிகாரி உயிரிழந்தது தெரியவந்தது.
1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கத் தூதரகம் செயல்படவில்லை. அங்குள்ள ஸ்விட்சா்லாந்து தூதகரம் மூலம்தான் ராஜீய ரீதியிலான பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.