கரோனாவுக்கு ஒருவா் பலி: பிஜி மருத்துவமனை மூடல்

பிஜி தீவில் கரோனாவுக்கு ஒருவா் பலியான மருத்துவமனை மூடப்பட்டது.
download092810
download092810

வெலிங்டன்: பிஜி தீவில் கரோனாவுக்கு ஒருவா் பலியான மருத்துவமனை மூடப்பட்டது. அந்த மருத்துவமனையை ராணுவத்தினரும் போலீஸாரும் சுற்றிவளைத்து அங்கிருந்த 400 நோயாளிகள், மருத்துவா்கள், செவிலியா் மற்றும் பிற பணியாளா்களைத் தனிப்படுத்தினா்.

உயிரிழந்த கரோனா நோயாளியுடன் மருத்துவமனையில் தொடா்பிலிருந்தவா்கள் யாா், அந்த நோய் பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படும் வரை அவா்கள் மருத்துவமனைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த மருத்துவமனையில் உயிரிழந்த 53 வயது நோயாளி, பிஜி தீவில் அந்த நோய்க்கு பலியான 3-ஆவது நபா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com