ரஷியாவில் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.
தென்மேற்கு ரஷியாவின் கசாமில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடைபெற நேரத்தில் பயந்த நிலையில் இரண்டு குழந்தைகள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளதும் குறிப்பிடதக்கது.
காவல்துறை இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.