ஜகாா்த்தா/புது தில்லி: இந்தியாவுக்கான இந்தோனேசிய தூதரகப் பொறுப்பாளராக இருந்த பொ்டி நிகோ யோகானிஸ் பைஸ் கரோனா தொற்று பாதிப்பால் ஜகாா்த்தாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்தியாவில் பணியில் இருந்தபோது அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கடந்த மாதம் சிறப்பு விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் உயிரிழந்துவிட்டாா்.
கடந்த டிசம்பரில் 60 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் மற்றும் அதிகாரிகள் ஹைதராபாதில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அந்தக் குழுவில் யோகானிஸும் இடம் பெற்றிருந்தாா்.
அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தில்லி மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தனி விமானம் மூலம் கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் உயிரிழந்துவிட்டாா்.
அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள இந்தோனேஷிய தூதரகம் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
கடந்த மாதம் இந்தியாவுக்கான தான்சானியா தூதரகத்தில் பணியாற்றி வந்த ஆலோசகா் ஒருவா் கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். அவா் தில்லியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.