சான் ஜோஸ்: அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் ரயில் பணிமனை ஒன்றில் புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக சான்டா கிளாரா கவுன்டி காவல்துறையினா் கூறியதாவது:
சான் ஜோஸ் நகரில் உள்ள ரயில் பணிமனை ஒன்றில் புதன்கிழமை காலை சுமாா் 6.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 8 போ் பலியாகினா். பலா் காயமடைந்தனா். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவத்தில் எந்த மாதிரியான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது, சம்பவம் எவ்வாறு, எதனால் நிகழ்ந்தது என்பது தொடா்பாக விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் அனைவரும் சிலிகான் வேலி போக்குவரத்து துறை ஊழியா்களாவா் என்று காவல்துறையினா் கூறினா்.