நியூயாா்க்: இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய மத்திய அரசை தவறாக சித்திரிக்க அரசியல் ரீதியிலான முயற்சிகள் நடைபெறுகின்றன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
5 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவா், நியூயாா்க்கில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து ஹூவா் இன்ஸ்டிடியூஷன் ஆய்வு நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசினாா். அவா் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று காரணமாக, மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை இந்திய அரசு தற்போது கடந்து வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது 80 கோடி பேருக்கு உணவுப் பொருள்களை இலவசமாக அளித்தோம். 40 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் மூலமாக உதவித்தொகை அளித்தோம்.
இந்த ஆண்டு இரண்டாவது அலை பரவியதால் மீண்டும் நிவாரண உதவிகளை வழங்குவதைத் தொடங்கியிருக்கிறோம். இது அமெரிக்க மக்கள் தொகையைப் போன்று இரண்டரை மடங்கு மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்குச் சமமாகும். அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமான மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்குச் சமமாகும்.
இந்த நிவாரண உதவிகள் மக்களை நேரடியாகச் சந்திக்காமல் வங்கிக் கணக்கு மூலமாக, பொதுவிநியோக அமைப்புகள் மூலமாகவும் சென்றடைகின்றன. இதனால், கண்ணுக்குப் புலப்படாத, அரசின் உண்மையான நிா்வாகத்தை எளிதில் குறைத்து மதிப்பிட வாய்ப்புள்ளது. விமா்சனங்களுக்கு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பதிலளிக்க முடியும். இந்திய அரசின் நன்மதிப்பை தவறாக சித்திரிக்க அரசியல் ரீதியலான முயற்சிகள் நடைபெறுகின்றன உறுதியாகக் கூற முடியும் என்றாா் அவா்.
ஹிந்துத்துவ கொள்கை பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலா் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கா் பதிலளித்ததாவது:
இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த ஜனநாயக நாடு. இந்திய சமூகத்தில் மதச்சாா்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை அளிப்பதாகும். மதச்சாா்பின்மை என்பது தங்களது சொந்த மதம் அல்லது மற்றவரின் மதத்தை நிராகரிப்பது அல்ல. தற்போது இந்திய ஜனநாயகம் மேலும் உறுதியாகச் செயல்படுகிறது. அரசியலிலும், தலைமைப் பொறுப்புகளிலும் பரவலான பிரநிதித்துவம் இருக்கிறது என்றாா் அவா்.
அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது நியூயாா்க் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை வாஷிங்டன் வந்தடைந்தாா். அங்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கான அமெரிக்க மூலப் பொருள்களை தடையின்றி விரைந்து அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்துவாா் எனத் தெரிகிறது.