ஆப்கானிஸ்தானின் வடக்க காபிஸா மாகாணத்தில் சனிக்கிழமை குண்டுவெடித்ததில் 4 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:
காபிஸாவில் உள்ள அல்பெரோனி பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களை ஏற்றிக்கொண்டு ஒரு மின் வேன் சென்று கொண்டிருந்தது. வழியில் அந்த வேனை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போ் உயிரிழந்தனா், 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றனா்.
காபூல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.