பாகிஸ்தானின் சத்நோதி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் மாவட்டமான சத்நோதியில் 40 பயணிகளைக் ஏற்றிக்கொண்டு தெசில் பகுதியிலிருந்து பலூச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடிரென இயந்திரக் கோளாரு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியானதோடு 8 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 14 பேர் படுகாயம்
இதுகுறித்து பூஞ்ச் துணை காவல்துறைத் தலைவர் ரஷித் நயிம் கான் , ‘ விபத்தில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள். காயமடைந்த 8 பேரில் 5 பேர் கொட்லி மாவட்டத்திற்கும் மீதம் இருப்பவர்கள் பலூச் மாவட்டத்திற்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் பூஞ்ச் மற்றும் நீலும் மாவட்டத்தில் நடந்த விபத்துகளில் 4 மாணவர்கள் உயிரிழந்ததோடு 32 பேர் காயமடைந்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.