ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் காயம்

ஆப்கனின் நங்கர்ஹாரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கனின் நங்கர்ஹாரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.

ஆப்கன் நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் இன்று காலை தொழுகையின்போது திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பத்தில் 15 பேர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 3 நாள்களுக்கு முன்பு நங்கர்ஹாரில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com