பிராக் / பிராடிஸ்லாவா: மத்திய ஐரோப்பிய நாடுகளான செக் குடியரசிலும் ஸ்லோவாகியாவிலும் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அரசு புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் செக் குடியரசில் 22,479 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது; ஸ்லோவாகியாவில் 8,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கைகள், இரு நாடுகளும் இதுவரை கண்டிராத அதிகபட்ச எண்ணிக்கைகளாகும்.
இத்துடன், செக் குடியரசில் 19,30,214 பேரும் ஸ்லோவாகியாவில் 5,78,208 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.