செக் குடியரசு: புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு

மத்திய ஐரோப்பிய நாடுகளான செக் குடியரசிலும் ஸ்லோவாகியாவிலும் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
czech093623
czech093623

பிராக் / பிராடிஸ்லாவா: மத்திய ஐரோப்பிய நாடுகளான செக் குடியரசிலும் ஸ்லோவாகியாவிலும் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அரசு புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் செக் குடியரசில் 22,479 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது; ஸ்லோவாகியாவில் 8,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கைகள், இரு நாடுகளும் இதுவரை கண்டிராத அதிகபட்ச எண்ணிக்கைகளாகும்.

இத்துடன், செக் குடியரசில் 19,30,214 பேரும் ஸ்லோவாகியாவில் 5,78,208 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com