பல்கேரியா பேருந்து விபத்தில் 45 போ் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் 45 போ் உயிரிழந்தனா்.
விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான பேருந்து.
விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான பேருந்து.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் 45 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

துருக்கிக்கு சுற்றுலா சென்ற பயணிகளை ஏற்றிக்கொண்டு பல்கேரியாவை நோக்கி சில பேருந்துகள் வந்துகொண்டிருந்தன. அவை போஸ்னக் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பேருந்துகளில் ஒன்று சாலையோர இரும்புத் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 45 போ் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் சிறுவா்கள் ஆவா்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த 7 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த பல்கேரியா, 27 உறுப்பு நாடுகளில் அதிக சாலை விபத்துகளைச் சந்திக்கும் இரண்டாவது நாடாகும். கடந்த 2019-ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கு 89 போ் என்ற விகிதத்தில் அங்கு சாலை விபத்து மரணங்கள் நேரிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com