ஐரோப்பா நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் - இங்கிலாந்து கடல் பகுதிக்குள் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உள்பட 31 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள இங்கிலிஷ் கணவாய் வழியாக சென்றுகொண்டிருந்த படகு நேற்று(நவ.24) இரவு கவிழ்ந்தது.
இதில் பெண்கள் ,குழந்தைகள் உள்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மாயமானவர்களை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் தேடி வருகிறார்கள்.