உலகம்
செக் குடியரசு: புதிய உச்சத்தில் கரோனா பாதிப்பு
செக் குடியரசில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
செக் குடியரசில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,717 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இது, கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையைவிட ஏறத்தாழ 2,000 அதிகமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
செக் குடியரசில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 20,62,140 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 32,595 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.