வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. விமானங்களைத் தாக்கி அழிக்கவல்ல புதிய வகை ஏவுகணைகளை தாங்கள் பரிசோதித்ததாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
வட கொரியா உருவாக்கியுள்ள புதிய வகை விமான எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்த சோதனை முக்கியப் பங்கு வகித்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஐ.நா. தடையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.